tamilnadu

img

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பள்ளி திறப்பு

ராஜ்கோட்:
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸால் 4,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்கோட் பார்டியில் ஒரு சுவாமி விவேகானந்தா பள்ளி சனிக்கிழமை திறக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். மாணவர்களை பள்ளிக்கு வருமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தித்தாகக் கூறப்படுகிறது.
கேள்வித்தாள்களை தயாரித்து மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கே அனுப்பி தேர்வு எழுத வைக்கவேண்டும் வழிகாட்டப்பட்டிருந்தது. இருப்பினும் கல்வித்துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளது என்று மாவட்ட மேம்பாட்டு அதிகாரி அனில் ரணவசியா கூறியுள்ளார்.
 

;